Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Thursday, December 30, 2010

நெல்லை அருகே விபத்து; ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் நசுங்கி சாவு

1 Comment so far
Labels:
ஆலங்குளம், டிச.30-

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகன் ஆசாரி மகன் கனி (வயது 40), கூலி தொழிலாளி. அவர் நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தில் வசித்து வந்தார். கனியின் மனைவி ஊரான சீதபற்ப நல்லூர் அருகே உள்ள காங்கேயன்குளத்தில் மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

கொடை விழாவுக்கு கனி மற்றும் அவருடைய உறவினர்கள் வந்து இருந்தனர். விழா முடிந்ததும் கனி மற்றும் அவரது உறவினர்களான பாளைய சமாதானபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பேச்சித்துரை (32), கோவில்பட்டி பாண்டவர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருமைக்கனி மகன் சாமித்துரை (37) ஆகியோர் காங்கேயன்குளத்தில் இருந்து மாறாந்தைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

புதூருக்கு கீழ்புறம் உள்ள முதியோர் காப்பகம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் திடீர் என்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, அருள் கிறிஸ்டோபர் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேர் உடல்களையும் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான கனிக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 வயது மகனும் உள்ளனர். சாமித்துரை வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

பேச்சித்துரை தச்சு தொழிலாளி. அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 1 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வி என்று பெயர் சூட்டினர்.கனியும், பேச்சித்துரையும் அக்காள்- தங்கை உறவு முறை கொண்டவர்களை திருமணம் செய்து உள்ளனர்.
 

ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பஸ் டிரைவர் புளியங்குடியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ராஜூவை கைது செய்தனர்.

ஆபாச வீடியோ காட்சி கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டினார்கள்; சாமியார் நித்யானந்தா பரபரப்பு தகவல்

Be the first to comment!
Labels:
திருவண்ணாமலை, டிச. 30-

நித்யானந்த சாமியாரின் 34-வது பிறந்தநாள் விழா நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்த தியான பீடத்தில் நடந்தது.
 
இதில் நித்யானந்தா சாமியார் பேசியதாவது:- 

33 ஆண்டுகளை முடித்து 34-வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொது மேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன். எனது 10 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஜீவ முக்த சமுதாயம் அமைய விதையாவது விதைத்துள் ளோம், அதை ஆலமரமாக உலகெங்கும் கொண்டு செல்வோம்.

தங்கள் துறையில் இருப் பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை. எத்தனை முறை தாக்கினாலும் தாக்கு பிடிப்போம் என்பதுதான் நமது வெற்றி. நாம் அழிக்க முடியாத விதையாக உருவாகி விட்டோம். 

120 இடங்களில் வழி பாட்டு தலங்கள் உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட் டும்தான் 17 இடங்களில் வழி பாட்டு தலங்களை கொழுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகளை கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் பக்தர்கள் தாக்கப்பட்டனர்.

திருப்பி தாக்காதீர்கள் என்ற எனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதி காத் ததுதான் நீங்கள் எனக்கு கொடுத்த குருகாணிக்கை. என் துறை வேறு, அவர் கள் துறைவேறு, அவர் கள் தவறு வெளியே வரக் கூடாது என்பதற்காக திருப்பி, திருப்பி அழிக்க நினைத்தார்கள். அவர் களை விரோதிகளாக கருதப் போவதில்லை.

எல்லோருக்கும் இழைக் கப்பட்ட அநீதியை தமிழக முதல்வருக்கு எங்கள் உணர்வை உருக்கி கடிதமாக எழுதி உள்ளேன். அதில் உங்கள் கண்ணீர், வேதனை எழுத்தப்பட்டுள்ளது. எங்கள் வழிபாட்டு சுதந்திரத்தை மீட்டு தாருங்கள், மத சுதந் திரத்தை மீட்டு தாருங்கள் என்று எழுதி இருக்கிறேன். முதல்வர் கலைஞரும் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடித்தத்தில் எனது ரத்தத்தால் கையெழுத்து போட்டு அனுப்புகிறேன், ஒரு லட்சம் பக்தர்களும் ரத்த கையெழுத்து போட்டும், ரத்தத்தால் கைநாட்டு வைத் தும் அனுப்புகிறோம். எங்கள் ரத்தத்தை சிந்துவதை தவிர வேறு வழியில்லை. உங்களை சந்திக்க நேரம் கிடைத்தால் நானே நேரில் வந்து சந்திக்கிறேன். எங்களை அழிக்க நினைக்கிறார்கள். இனியும் பொறுத்து கொள்வது நீங்கள் ஆளும் நாட்டில் எங்கள் மக்களால் முடியாது. 

நாங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரத்தை உளவுத் துறை மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பிறகும் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால் கன்னியாக்குமரியில் இருந்து பாத யாத்திரை நடத்துவோம். அப்போது வீடுவீடாக சென்று பிச்சை எடுத்து மதஉரிமையை பாதுகாப்போம்.

கோடிகணக்கில் பணம் கேட்டு மிரட்டப்பட்டேன், மிரட்டிய நபர்கள் யார் என்பதை கோர்ட்டில் தெரி விப்பேன். அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை. அதனால் பக்தர்கள் மிரட்டப்பட்டு அவர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டது.

அதற்கு போதிய ஆதா ரம் இல்லாததால் அமைதி காத்தோம். இதற்கு மேலும் சொல்லப்படாமல் இருந் தால் அது சொல்லாமலேயே அழிந்துவிடும் என்பதால் உலகின் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

மேற்கண்டவாறு நித்யானந்தா பேசினார். 

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:- 
 

கேள்வி:- டி.வி.யில் வெளியான சி.டி. உண்மையா? அதில் இருப்பது நீங்கள் தானே?.

பதில்:- எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை சித்தரிக்கப் பட்டவை. நீதி மன்றத்தில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.

கேள்வி:- உங்கள் படுக்கை அறியில் கேமரா வைத்த வருக்கும், உங்களுக்கும் என்ற உறவு முறை, என்ன கருத்து வேறுபாடு?.

பதில்:- அவர் எனது சீடராக இருந்தார். வேறு காரணம் தெரியவில்லை.

ரஞ்சிதாவை பார்த்திருக்கிறீர்களா?

கேள்வி:- ரஞ்சிதாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும், அவரை நீங்கள் நேரில் சந்திதிருக் கிறீர்களா?

பதில்:- ரஞ்சிதா எனது பக்தை, அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக தெரியும், அவர் ஆசிரமத்திற்கு வந்து சென்றுள்ளார்.

கேள்வி:- எதற்காக உங்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி னார்கள்?.

பதில்:- சி.டி.யை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டார்கள். கெட்ட பெயரை ஏற்படுத்தி, புகார் கொடுத்து சட்டரீதியாக மிரட்டுவோம் என்று கூறினர்.

இவ்வாறு நித்யானந்தா சாமியார் கூறினார்.

இன்று அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம்; கூட்டணி பற்றி ஜெயலலிதா முடிவு

Be the first to comment!
Labels:




சென்னை, டிச. 30-

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடை பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி ஏற்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. வுடன் புதிதாக கூட்டணி அமைக்கும் கட்சிகள் எவை என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் மாலை 3.45 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொதுக்குழு, செயற் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப் பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்பட சுமார் 150 பேர் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழுவில் பொதுக் குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பது, தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து தொண்டர்கள் கருத்தை ஜெயலலிதா கேட்டு அறி கிறார். இது தொடர்பான அறிவுரைகளையும் செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.

கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. முன்னதாக எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்துவார் என்று தெரி கிறது.

இன்றைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்படு கின்றன. பொதுக்குழுவில் ஜெயலலிதா சிறப்புரையாற்றுகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி, அது நடைபெறும் மண்டபம் அமைந்துள்ள வானகரம் பகுதியில் கொடி, தோரணங் கள் கட்டப்பட்டுள்ளன. வழி நெடுக ஜெயலலிதாவை வரவேற்கும் வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. வின் பல்வேறு பிரிவுகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Wednesday, December 29, 2010

பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து நயன்தாரா மகிழ்ச்சி திருமண ஏற்பாடு தீவிரம்

Be the first to comment!
Labels:

சென்னை, டிச. 29-
பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் “வில்லு” படப்பிடிப்பில் காதல் பிறந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.பிரபுதேவா மனைவி ரம்லத் இந்த காதலை எதிர்த்தார். திருமணத்துக்கு தடைக்கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பிரபுதேவா-நயன்தாரா இருவரும் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பினார்.

இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக நேற்று பிரபுதேவா-ரம்லத் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்து குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் சேர்ந்தே வந்து இந்த மனுவை தாக்கல் செய்தார்கள். அதில் கூறி இருப்பதாவது:-


எங்களுக்கு 1995ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் பசவராஜூ 2008-ம் ஆண்டு டிசம்பரில் இறந்தான். எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடும் புரிதன் இன்மையும் ஏற்பட்டு உள்ளது. இனிமேல் சேர்ந்து வாழ்வது கடினம் என்று புரிந்து கொண்டோம்.


எங்களால் சந்தோஷமாக வாழமுடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தனியாகத்தான் வாழ்கிறோம். எங்களை சேர்த்து வைக்க நண்பர்களும் நல விரும்பிகளும் முயன்றனர். அது பலனிக்கவில்லை. எனவே விவாகரத்து கோருகிறோம்.


இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

பிரபுதேவா-ரம்லத் இருவரும் சம்மதித்து விவாகரத்து கோருவதால் இருவருக்கும் சீக்கிரமே விவாகரத்து கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நயன்தாரா மகிழ்ச்சி அடைந்தார். அவர் கடந்த சில மாதங்களாகவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தமிழில் கடைசியாக நடித்த படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. அதன் பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கன்னடத்தில் ரூ.1 கோடி சம்பளத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறி விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ரம்லத் வழக்கால் அது தடைப்பட்டது. தற்போது மீண்டும் திருமண ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விவாகரத்து கிடைத்த உடனேயே திருமணம் நடை பெறும் என கூறப்படுகிறது.

Canada is the most web-addicted nation on earth

Be the first to comment!
Labels:

Toronto:


Canada is the most web-addicted nation on the planet.

Canadians spend more time on the web and its offshoots - Facebook, YouTube and Twitter - than people anywhere else in the world. They are neck and neck with Indians for the number of Facebook accounts, says a report.

According to comScore, the leading online measurement service, Canadian online users log in more than 2,500 minutes a month, followed by Israelis with about 2,300 minutes. Users in a few other countries cross the 2,000-minute mark.

Giving figures for the month of April, comScore said nearly 68 per cent of the Canadian population was online, compared to 62 per cent in France and the United Kingdom, 60 per cent in Germany, 59 per cent in the US, 57 per cent in Japan, and 36 per cent in Italy.

In this country which leads the world in internet access, Canadians also lead the world in various offshoots of the web - Facebook, Twitter and YouTube, according to the report.

"In Canada, YouTube per capita consumption of video is No. 1 in the world. It's just absolutely crazy in terms of how passionate Canadians are about YouTube," the Canadian Press quotes Chris O'Neill, Canada's country director for Google, as saying.

According to him, more than 21 million Canadians out of its population of 34 million visit YouTube each month, compared to 147 million Americans in a population of over 310 million.

But considering the US has 10 times Canada's population, Canadians are way ahead on a per capita basis, says the report.

Canadians also watch more videos each month, with an average of 147 as compared to 100 per US viewer.

With more than 17 million Facebook users, Canada has more than half of its population hooked to this socializing web site.

India and Canada are neck and neck for the 9th and 10th positions on the list of countries with the most Facebook accounts, according to the report.

Though no figures are available for Twitter accounts in Canada, their number has jumped 75 per cent since the beginning of the year, according to Twitter.

In fact, Canadian pop sensation Justin Bieber, who is just 16, has more than 6.4 million followers on Twitter.

Engineering student burnt to death in Orissa

Be the first to comment!
Labels:
Rourkela:

A 22-year-old engineering student died and seven others sustained burn injuries when a house was allegedly set ablaze by its owner at Jagda in Jhirpani here.

Gopal Pradhan, a 3rd year student of Padmanav Engineering College, succumbed to his burn injuries at Ispal General Hospital (IGH) on Wednesday morning, police said.

The incident took place last night when the students gathered for a feast at the residence of Akshya Swain (75), a retired employee of Rourkela Steel Plant. His grandson Anup was also a student of the same college.

Suddenly, Swain closed the door from outside, poured petrol and set the house on fire, they said, adding, his son Ajit and Anup were also inside the room.

Swain was arrested. Property dispute between him and Ajit seems to have led the incident, police said.

Tuesday, December 28, 2010

ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: கருணாநிதி உத்தரவு; அரசு ஊழியர்களைப்போல் “மருத்துவ காப்பீடு”

Be the first to comment!
Labels:
சென்னை, டிச. 28-
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
2006-ல் கருணாநிதி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பு ஊதியத்திற்குப் பதிலாக, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
 
தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவையுடன் இணைந்த கூட்டுறவு நியாயவிலைக் கடைப்பணியாளர் சங்கமும் மற்றும் சில சங்கங்களும், கூட்டுறவு நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசுக்கு அளித்திருந்தன.
 
அக்கோரிக்கைகளை பரிசீலித்திட, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு, கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும், எடையாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அளித்துள்ள பரிந்துரை ஏற்கப்பட்டது.
 
அதன்படி புதிதாக நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் மாத தொகுப்பு ஊதியமான 3,000 ரூபாயை, இனி 4,000 ரூபாயாகவும், எடையாளர்களுக்கு வழங்கப்படும் மாத தொகுப்பூதியத்தை 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும் உயர்த்தியும்,

இவர்களின் தொகுப்பூதியம் பெறும் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை ஓராண்டாக குறைத்தும், ஓராண்டிற்குப் பிறகு விற்பனையாளர்களுக்குக் காலமுறை ஊதியமாக ரூ.3,300 - ரூ.8,000 என்ற ஊதிய விகிதமும், எடையாளர்களுக்கு ரூ.3,000 -ரூ.7,000 என்ற ஊதிய விகிதமும் வழங்கப்படும்.
 
இதுதவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப் படியாக மாதம் 1000 ரூபாயும்; இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப்படியாக 750 ரூபாயும்; எடையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாதம் 500 ரூபாயும், இதர பகுதிகளில் மாதம் 250 ரூபாயும் வழங்கிடவும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
 
மேலும் இப்பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல அகவிலைப்படி வழங்கிடவும், அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதத் தொகை ஆண்டு ஊதிய உயர்வாக அளித்திடவும், 15 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு, முறையே தேர்வுநிலையில் ஊதிய உயர்வு அளித்து ஊதியம் நிர்ணயம் செய்து, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம், வீட்டு வாடகைப்படியாகவும் வழங்கப்படும்
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நகர ஈட்டுப்படியாக அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும், இதர மாநகராட்சிப் பகுதிகளில் 4 சதவீதமும் நகர ஈட்டுப்படியாக வழங்கப்படும்.
 
இத்துடன், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் - உயரிய மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தியும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
 
இந்த ஆணையின்படி திருத்தப்பட்ட ஊதியங்களை 1.1.2010 முதல் நடைமுறைப்படுத்தி, அதன் பணப்பயன் 1.1.2011 முதல் வழங்கப்படும்.
 
இதன்மூலம் 23 ஆயிரத்து 377 கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் பயன்பெறுவார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நள்ளிரவில் நட்சத்திர ஓட்டல்களை மூட வேண்டும்; போலீஸ் அதிரடி நடவடிக்கை

Be the first to comment!
Labels:
சென்னை, டிச. 28-

சென்னையில் 2011 புத்தாண்டு கொண்டாட்டம் நட்சத்திர ஓட்டல்களில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
மது விருந்து, நடன நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாநிலங்களில்
இருந்தும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து நடன அழகிகளை அழைத்து வருகிறார்கள்.

2007-ம் ஆண்டு தனியார் ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடத்தினார்கள்.
அப்போது மேடை சரிந்து நீரில் மூழ்கியதால் உயிர்ப்பலி ஏற்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் 45 பேர், கேளிக்கை விடுதி, கிளப்புகளின் உரிமை யாளர்கள், நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், தென்சென்னை இணை கமிஷனர் சக்தி வேல், துணை கமிஷனர்கள் சாரங்கன், பெரியய்யா, லட்சுமி, சண்முகவேல் உள்பட போலீஸ் அதிகாரி களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

* போக்குவரத்துக்கு இடையூறு இன்றி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருபவர்களது வாகனங்களை நிறுத்த இட வசதி செய்து தரவேண்டும்.

* புத்தாண்டு கொண்டாட வரும் பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

* இட வசதிக்கேற்ப மட்டுமே ஆட்களை அனுமதிக்க வேண்டும்.

* ஓட்டல்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.

Monday, December 27, 2010

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை; கொள்ளையர்கள் அட்டூழியம்

Be the first to comment!
Labels:

டெக்காஸ், டிச. 26-
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரா. இவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்.) படிக்க அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்று இருந்தார். படித்துக் கொண்டே இவர் அங்கு 24 மணி நேரமும் திறந்து இருக்கும் பல்பொருள் அங்காடியில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டிருந்தார். கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர் அங்கு பணியில் இருந்தார்.
அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி 2 பேர் கொள்ளையர் வந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த ஜெயச்சந்திராவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில், 5 குண்டுகள் பாய்ந்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட ஜெயச்சந்திராவின் உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் வடஅமெரிக்க தெலுங்கர்கள் சங்க பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.

Sunday, December 26, 2010

பிஜித்தீவு அருகே பூமி அதிர்ச்சி: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Be the first to comment!
Labels:
பிஜி, டிச.25-
பிஜித்தீவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டு தீவில் இன்று சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் தாக்கிய இந்த பூமி அதிர்ச்சியால், வானாட்டு தீவே அதிர்ந்தது. பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து, வானாட்டு தீவையும், அதன் அருகே உள்ள பிஜித்தீவு, நியூ கலிடோனியா ஆகிய நாடுகளையும் சுனாமி தாக்கக்கூடும் என்று அமெரிக்காவின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்தது.
20 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்துக்குள் சுனாமி தாக்கும் என்று கூறியது. ஆனால், சுனாமி வரவில்லை. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

மைசூர் பழைய இரும்பு கடையில் தீ: 4 பேர் கருகி பலி

Be the first to comment!
மைசூர், டிச.25-
மைசூர் பஸ் நிலையம் அருகே உள்ள இர்வின் ரோட்டில் இரும்பு சாமான்கள் உள்பட பழைய பொருட்களை வாங்கும் கடை இருந்தது. இந்த கடையில் 8 பேர் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் அந்த கடையில் திடீர் என்று தீப்பிடித்தது. கடையில் இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வருவதற்குள் தீ கடை முழுவதும் பரவி தகதகவென எரிந்தது.
தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையின் உள்பகுதியில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் 4 பேர் தீயில் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் கடை உரிமையாளர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்

Saturday, December 25, 2010

பள்ளிக்கூட சுவர் விழுந்து 2 பேர் பலி; காண்டிராக்டர்கள் தலைமறைவு

Be the first to comment!
Labels:
ராயபுரம், டிச. 25-
ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நேற்று நடந்தது. நார்த் வீக் பள்ளிக்கூடம் அருகே தொழிலாளர்கள் வந்தவாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி (35), கிருஷ்ணமூர்த்தி (25), வெங்கடஸ்வரன் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்அப்போது அருகில் இருந்த பள்ளிக்கூட சுவர் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்களையும் அமுக்கியது.
இதில் தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வெங்கடேஸ்வரன் பலத்த காயத்துடன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கட்டுமான பணி காண்டிராக்டர்கள் ரமேஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

தெலுங்கு இயக்குனருடன் அனுஷ்கா காதல்

Be the first to comment!
Labels:
அருந்ததிபடம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. “சிங்கம்படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். தற்போதுவானம்படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
 
அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் கோபிசந்துக்கும் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர். பின்னர் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டது.

தற்போது தெலுங்கு நடிகர் கிரிஷை அனுஷ்கா காதலிப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது. கிரிஷ்கம்பம், “வேதம்போன்ற தெலுங்கு படங்களை டைரக்டு செய்துள்ளார். “வேதம்படத்தில் அனுஷ்கா நடித்தார்.

அப்போது காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதல் விஷயத்தை மறைத்து வைத்திருந்தனர். இப்போது அது வெளியே கசிய துவங்கி உள்ளது. விரைவில் கிரிஷை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என்கின்றனர்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz