அமெரிக்காவில் உள்ள ஓட்டல்களின் உணவு பண்டங்களில் விஷம் கலக்க தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது டெட் ராய்ட் வந்த அமெரிக்க விமானத்தை குண்டு வைத்து தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம் தீட்டினர். அந்த சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
அதேபோன்று. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது புதுவித சதி திட்டம் தீட்டியுள்ளனர். பண்டிகையின்போது அமெரிக்க நகரங்களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும். அதிக அளவில் உணவு பொருட்கள் விற்பனையாகும். அதில் விஷத்தை கலக்க திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக “சால்ட்பன்”, “பப்பட்ஸ்” போன்ற உணவு பொருட்களில் ரிசின், சயனைடு ஆகிய விஷத்தை கலக்க உள்ளனர். இச்சதியை இந்த வாரத்திற்குள் செயல் படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
எனவே ஓட்டல் உரிமையாளர்களும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் பாதுகாப்பு துறையும், உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும் இதற்காக யாரும் பீதியோ, கலக்கமோ அடைய வேண்டாம். அவர்களின் சதி முறியடிக்கப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என உள்நாட்டு பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது.
அதேபோன்று. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது புதுவித சதி திட்டம் தீட்டியுள்ளனர். பண்டிகையின்போது அமெரிக்க நகரங்களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும். அதிக அளவில் உணவு பொருட்கள் விற்பனையாகும். அதில் விஷத்தை கலக்க திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக “சால்ட்பன்”, “பப்பட்ஸ்” போன்ற உணவு பொருட்களில் ரிசின், சயனைடு ஆகிய விஷத்தை கலக்க உள்ளனர். இச்சதியை இந்த வாரத்திற்குள் செயல் படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
எனவே ஓட்டல் உரிமையாளர்களும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் பாதுகாப்பு துறையும், உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும் இதற்காக யாரும் பீதியோ, கலக்கமோ அடைய வேண்டாம். அவர்களின் சதி முறியடிக்கப்படும். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என உள்நாட்டு பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது.
0 comments: