சென்னை, ஜன. 8-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 9.1.11 அன்று சேலத்தில் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது.
அதனையொட்டி கழக நிர்வாகிகளும், தொண்டர் களும், ஆதரவாளர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். சற்றும் எதிர்பாராத வகையில் மாலைமலரில் 7.1.2011 அன்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வின் தலைமையை விமர்ச்சித்து தே.மு.தி.க. நிர்வாகி களின் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
தே.மு.தி.க. விற்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்தவிதமான சம்பந்த மும் இல்லை. தே.மு.தி.க. நிர்வாகிகளான வி.சி. சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்) கே. செந்தாமரைக்கண்ணன் (மத்திய சென்னை மாவட் டக் செயலாளர்), விசாக ராஜன் (துறைமுகப் பகுதி செயலாளர்), ஆர். கோவிந் தன் (ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர்) ஆகியோர் பெயரில் இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால் இந்த அற்பக் காரியத்தை செய்த அந்த சமூக விரோதி களை கண்டுபிடித்து அவர் கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தே.மு.தி.க.வைப் பொறுத்த வரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டி: ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலம்
0 comments:
Confused? Feel free to ask