Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Thursday, January 20, 2011

இணைய தளம் மூலம் தேர்வு; உலகின் 7 புதிய அதிசயங்கள் அறிவிப்பு; தாஜ்மகாலுக்கு முதலிடம்

Be the first to comment!
Labels:
லண்டன், ஜன 20-


உலகில் புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்ய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்னாட் வெப்பர் என்பவர் இணைய தளம் மூலம் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. யுனஸ்கோ அமைப்பும் வாக்கெடுப்பு மூலம் உலக அதிசயங்களை தேர்வு செய்ய கூடாது என கண்டனம் தெரிவித்தது.

ஆனால் அதையும் மீறி தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. இணைய தளம் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு முடிந்து 21 கட்டிடங்கள் மட்டும் இறுதி பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டன.

இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குதிப்மினார் உள்ளிட்ட கட்டிடங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் எகிப்து பிரமிடை நிரந்தர அதிசயமாக கூறி இருந்தனர். மீதி 7 கட்டிடங்களை தேர்வு செய்ய தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது. உலகம் முழுவதும் இருந்து 10 கோடி பேர் ஓட்டு போட்டனர்.

இறுதியில் 7 அதிசயங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலை நேற்று போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில் முறைப்படி அறிவித்தனர்.

இதில் தாஜ்மகால் முதலிடத்தை பெற்று உள்ளது.  7 அதிசயங்களின் பெயர் மற்றும் அமைந்துள்ள நாடுகள் விவரம்:-

1. தாஜ்மகால் இந்தியா

2. சீனபெருஞ்சுவர்- சீனா

3. பெட்ரா-ஜோர்டான்

4. பிரமாண்ட ஏசுநாதர் சிலை பிரேசில்

5. மச்சுபிச்சு- பெரு

6. மயன்-மெக்சிகோ

7. கொலோசியம்- இத்தாலி

7 அதிசயங்கள் அறிவிக்கப்பட்டாலும் இதை ஐ.நா. அமைப்போ அல்லது முக்கிய அமைப்புகளோ ஏற்கவில்லை.

Saturday, January 8, 2011

ஐ.பி.எல். போட்டி: ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலம்

Be the first to comment!
Labels:
பெங்களூர், ஜன. 8- 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

வீரர்கள் ஏலம் முறையில் அணிக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டதால் இந்தப்போட்டிக்கு அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை 3 ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சென்னை சூப்பர் கிங்ஸ் (2010) ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. 4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ந்தேதி தொடங்குகிறது.

இதில் கூடுதலாக புனே, கொச்சி அணிகள் சேர்க்கப்பட்டுள் ளன. இதனால் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.   கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடிய வீரர்களின் ஒப்பந்தம் முடிந்தது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் விருப்பம் உள்ள வீரர்களில் 4 பேரை நீட்டித்து கொள்ளலாம் என்று ஐ.பி.எல். அமைப்பின் விதியில் தெரிவிக்கப் பட்டது.

இதன்படி சென்னை அணியில் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பிமார்கல் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரும், மும்பை அணியில் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், போலாட் (வெஸ்ட் இண்டீஸ்), மலிங்கா (இலங்கை) ஆகியோரும் நீட்டிக்கப்பட்டுள்ளனர். வார்னே, வாட்சனை ராஜஸ்தான் அணியும், ஷேவாக்கை டெல்லி அணியும், வீராட் கோக்லியை பெங்களூர் அணியும் நீட்டித்துள்ளது. மொத்தம் 12 வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர். 

4-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடக்கிறது. மொத்தம் 350 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அணியும் 30 வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தொகை ரூ.40.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புதிய அணிகளான கொச்சி, புனே ஆகிய 5 அணிகளும் ரூ.40.5 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். சென்னை, மும்பை அணி ஏற்கனவே தலா 4 வீரர்களை ரூ.20.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்து விட்டது. இதனால் அந்த 2 அணி களும் ரூ.20.25 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

ராஜஸ்தான் அணி ரூ.25.6.கோடி வரைக்கும், டெல்லி டேர்டேவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா ரூ.32.4 கோடி வரைக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். மொத்தம் ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்.

தே.மு.தி.க.வுக்கு எதிராக விளம்பரம்; விஜயகாந்த் கண்டனம்

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன. 8-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 9.1.11 அன்று சேலத்தில் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு சிறப்பாக நடைபெறவுள்ளது.

அதனையொட்டி கழக நிர்வாகிகளும், தொண்டர் களும், ஆதரவாளர்களும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். சற்றும் எதிர்பாராத வகையில் மாலைமலரில் 7.1.2011 அன்று முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வின் தலைமையை விமர்ச்சித்து தே.மு.தி.க. நிர்வாகி களின் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது.

தே.மு.தி.க. விற்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்தவிதமான சம்பந்த மும் இல்லை. தே.மு.தி.க. நிர்வாகிகளான வி.சி. சந்திரகுமார் (கொள்கை பரப்பு செயலாளர்) கே. செந்தாமரைக்கண்ணன் (மத்திய சென்னை மாவட் டக் செயலாளர்), விசாக ராஜன் (துறைமுகப் பகுதி செயலாளர்), ஆர். கோவிந் தன் (ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர்) ஆகியோர் பெயரில் இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால் இந்த அற்பக் காரியத்தை செய்த அந்த சமூக விரோதி களை கண்டுபிடித்து அவர் கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க.வைப் பொறுத்த வரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டி: ரூ.335 கோடிக்கு வீரர்கள் ஏலம்

இந்தியாவில், ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு

Be the first to comment!
Labels:
வேலூர் சி.எம்.சி.யில் குழந்தைகளுக்கான நோய்கள் என்ற தலைப்பில் குளிர்கால கருத்தரங்கு நடந்தது. அதில், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் குறித்தும் அவற்றை குணப்படுத்தும் சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.   ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவற்றை குணப்படுத்த முடிவதில்லை.

ஏனெனில் பொருளாதார பற்றாக் குறையே இதற்கு காரணமாக உள்ளது என்று டாக்டர்கள் கூறினர். வளர்ந்த நாடுகளில் 20 சதவீதமும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 80 சதவீதம் குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்படும் 90 சதவீத குழந்தைகள் காப் பாற்றப்படுகின்றனர்.   அதே நேரத்தில் இந்தியாவில் 20 முதல் 40 சதவீதம் குழந்தைகள் மட்டுமே குணப்படுத்தப்படுகின்றனர். இருந்தும் வெளிநாடுகளை விட இந்தியாவில்தான் குழந்தைகள் ஆரோக்கியத் துடன் பிறக்கின்றன.

ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சத்தாண உணவு கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவலை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முரளி சிந்த கும்பாலா தெரிவித்தார்.

அமெரிக்காவில் கூடுதல் இரும்பு சத்து காரணமாக பெரும்பாலான குழந்தைகள் அவதிப்படுகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் போதிய அளவு இரும்பு சத்து கிடைக்காமல் நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்ற தகவலை டியூக் பல்கலைக் கழகத்தின் மருந்தியல் பள்ளிட முதல்வர் நான்சி சி.ஆண்ட்ரூஸ் கூறினார்.

Tuesday, January 4, 2011

மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு ரத்து செய்வது குறித்து டெல்லியில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் கபில்சிபல் தகவல்

Be the first to comment!
Labels:
மாத்தூர், ஜன.4-

மருத்துவபடிப்பு நுழைவு தேர்வு ரத்து செய்வது குறித்து டெல்லியில் 3 நாட்கள் ஆலோசனை நடைபெறும் என மத்திய மந்திரி கபில்சிபல் கூறினார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர், லக்னோ, கோழிக்கோடு, இந்தூர், ஷில்லாங் நகரங்களில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ((ஐ.ஐ.எம்.) செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் திருச்சி , ஜார்க்கண்டில் ராஞ்சி, சட்டீஸ்கரில் ராய்ப்பூர், அரியானா ரோடாக் ஆகிய 4 இடங்களில் ஐ.ஐ.எம். தொடங்க இந்திய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகேயுள்ள சூரியூர் கிராமத்தில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல், கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மத்திய இணை மந்திரி புரந்தேஸ்வரி, அமைச்சர்கள் பொன்முடி, செல்வராஜ் கலெக்டர் மகேசன் காசிராஜன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய மந்திரி கபில்சிபல் பேசியதாவது:- இந்திய அளவில் கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர் உள்பட 7 இடங்களில் இந்திய மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் திருச்சி, ராஞ்சி உள்பட 4 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள கல்வியறிவு பெற்ற மாணவர்கள் இளைஞர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. தற்போது இந்திய நாட்டில் மக்கள் தொகை அடிப்படை வசதிகள் என அனைத்துமே பெருகிவிட்டன.

எனவே இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 50 சதவீதம் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்காக உயர்கல்வி நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய மந்திரி கபில்சிபல் பேசினார். பின்னர் மத்திய மந்திரி கபில்சிபல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு நடத்துவது உறுதியாகவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளதே?

பதில்: இந்திய மருத்துவ கழகம் நுழைவு தேர்வு நடத்தும் திட்டத்தை திரும்ப பெற உள்ளதாக செய்திதாள் மூலம் அறிந்தேன். ஏற்கனவே நுழைவு தேர்வு தேவையில்லை என்று சில மாநில அரசுகள் வலியுறுத்தியும் வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கே: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பணம் வாங்கி கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பது பற்றி?

ப: இதை, அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

கே: இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு எவ்வளவு நீதி ஒதுக்கீடு செய்யப்படும்?

ப: தமிழகத்தில் திருச்சி உள்பட 4 இடங்களில் ஆரம்பிக்கப்படும் ஐ.ஐ.எம்.முக்கு தலா ரூ.500 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்கள்

கே: ஐ.ஐ.எம்.மில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுமா?

ப: விழா மேடையில் நான் சொன்ன கருத்தை மீறமாட்டேன். ஐ.ஐ.எம்.மில் படிக்க பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தேவையான முயற்சி கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி கபில்சிபல் கூறினார்.

ஓட்டுக்காக இலவச திட்டங்கள்: காய்கறி- வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது; ஜெயலலிதா குற்றச்சாட்டு

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன.4-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஏழை, எளிய மக்கள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டில் இலவசங்கள் தொடரும் என்று புத்தாண்டு தினத்தன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசி இருக்கிறார். இதை வலியுறுத்தியதன் மூலம், வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அப்பொழுதுதான், சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து, ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார்.
 
அடிப்படைக் கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் தன்னிச்சையாக இலவசங்களை கொடுத்துக்கொண்டு வருவது, கைவசம் தங்கத்தை இருப்பில் வைத்துக் கொள்ளாமல் கரன்ஸி நோட்டுக்களை அச்சடிப்பது போன்றது ஆகும். இதன் மூலம் பணத்தின் மதிப்பு, பணம் அச்சடிக்கும் தாளின் மதிப்புக்கு சமமாகக் கூட இல்லாமல் மிகவும் மலிந்துவிடும்.
 
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 90 ரூபாய். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை. அனைத்துக் காய்கறிகளும் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.
 
சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் பருப்பின் விலை கிட்டதட்ட ஒரு கிலோ 100 ரூபாய். சமையல் எண்ணெயின் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல். சமையல் எரிவாயு அடுப்புகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு 30 நாட்கள் வரை விநியோகம் செய்யப்படுவதில்லை. அந்த அளவுக்கு எரிவாயு பற்றாக் குறை நிலவுகிறது.
 
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம், உத்தேச பயனாளிகளுக்கு இந்தச் சலுகை பயனளிப்பதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக தரப்படுகின்றன.
 
ஆனால் கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவு ஆகிறது.  கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில், கர்நாடகத்திற்கு 911 டி.எம்.சி. அடி தண்ணீரையும், மகாராஷ்டிராவிற்கு 666 டி.எம்.சி. அடி தண்ணீரையும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 1,001 டி.எம்.சி. அடி தண்ணீரையும் பகிர்ந்து அளித்து நீதியரசர் பிரஜேஷ் குமார் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்தத் தாவாவில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களும் இதற்கு முன்பு பெற்றிருந்ததைவிட கணிசமான அளவுக்கு கூடுதலாக நீரைப் பெற இந்தத் தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெறும் 15 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே.
 
முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்த வரையில், பழைய அணையை செயலிழக்கச் செய்து, புது அணையை கட்ட கேரளா தயாராகி வருகிறது. புது அணை கட்டப்பட்ட பிறகு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது.   இலங்கையில், தமிழ் இனத்தின் கணிசமான பகுதி ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது.
 
இன்று கூட கிட்டதட்ட ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய சொந்த மண்ணிலேயே முட்கம்பியால் ஆன வேலிக்கு பின்னால் அகதிகளாக மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
ஆனால், கருணாநிதியோ தன் மகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி, அவர்களை வைத்து இலங்கையில் எல்லாம் சிறப்பாக நடக்கிறது என்று சான்றிதழ் கொடுக்க வைத்தார்.
 
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நாள், பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோர்ட்டில், அம்மாவுடன் போகச் சொன்னால் அழுது புரளுவேன்;நடிகை வனிதாவின் மகன் பேட்டி

Be the first to comment!
Labels: ,
சென்னை, ஜன.4-

நடிகர் விஜயகுமார் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகை வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் செய்தார். விஜயகுமார் தரப்பில் இருந்தும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை நடிகை வனிதா தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியை (வயது 9) தன்னிடம் இருந்து ஆகாஷ் கடத்தி சென்றுவிட்டதாகவும், சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்தனர். ஜனவரி 5-ந் தேதிக்குள் சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். காலக்கெடு 2 நாட்களே உள்ள நிலையில், சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தான். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு விஜய்  

ஸ்ரீ ஹரி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீ யாருடன் போக விரும்புகிறாய்?.

பதில்:- அப்பாவுடன்.

கேள்வி:- ஏன்?.

பதில்:- அம்மாவுடன் போனால் டார்ச்சர் செய்வாங்க.

கேள்வி:- அம்மா உன்னை நன்றாக பார்த்து கொண்டதாக கூறுகிறாரே?.

பதில்:- அப்படி ஒன்றும் இல்லை. எனது வளர்ப்பு தந்தை ஆனந்தராஜன், தினமும் நான் பள்ளிக்கூடம் செல்லும் போது, `குட்மானிங்' சொல்ல வேண்டும்என்று கூறுவார். நான் சொல்ல சென்றால், நன்றாக தூங்கிக் கொண்டுஇருப்பார். எழுப்பினால், கண் விழிக்க மாட்டார். நான் பள்ளிக்குசென்றுவிடுவேன். மாலையில் வீட்டிற்கு வந்தால், ஏன்? காலையில்சொல்லிவிட்டு செல்லவில்லை என்று என்னை அடிப்பார். முழங்கால் போடச்சொல்வார். இதை அம்மா (வனிதா) தட்டிக் கேட்க மாட்டார். அவர்கள் இரண்டுபேரும் மாலையிலேயே பார்ட்டிக்கு செல்வதாக கூறி சென்று விடுவார்கள். வீட்டில் 2 பேரும் மது அருந்தும் போதும், என்னை பிரிட்ஜில் இருந்து ஐஸ்எடுத்து வரச் சொல்வார்கள். எனக்கு டீ கூட வேலைக்கார பெண்தான் தருவாள்.

கேள்வி:- வனிதாவுடன்தான் நீ செல்ல வேண்டும் என்று கோர்ட்டுகூறியுள்ளதே?.

பதில்:- போகமாட்டேன். அப்படி சொன்னால் அங்கேயே அழுது புரளுவேன்.

இவ்வாறு சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரி கூறினான்.

அதனைத் தொடர்ந்து, அவனது பாட்டி மகேஸ்வரி (ஆகாஷின் அம்மா) நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது பேரனை மையமாக வைத்து நடக்கும் பிரச்சினை உங்களுக்கு எல்லாம் தெரியும். அவன் சுதந்திரமாக படிக்க, எங்களுடன் இருக்க விரும்புகிறான். அங்கு சென்றால் (வனிதாவிடம்) செத்து விடுவேன் என்று புலம்புகிறான்.

சிறுவயதிலேயே அவன் படும் வேதனையை பார்க்க எங்களால் முடியவில்லை. 7 வயது வரை அவன் எங்களுடன்தான் இருந்தான். அதன் பின்னர்தான் அங்கு வளர்ந்தான். எனது பையன் (ஆகாஷ்) வாழ்க்கைதான் வீணாகிவிட்டது. என் பேரன் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது.
இப்போதுகூட பள்ளிக்கூடம் சென்றால் எங்கே கடத்தி விடுவார்களோ? என்று பயந்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளான். எனது மகன் ஆகாஷ் இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆகாஷ் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை உயர்வு இப்போது இல்லை மத்திய அரசு முடிவு

Be the first to comment!
Labels:
புதுடெல்லி, ஜன.4-
உணவு பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் டீசல் விலையை உயர்த்தும்முடிவை மார்ச் மாதம் வரை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டுவருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதனால், பெட்ரோல்விலையை சர்வதேச சந்தைக்கு ஏற்ப அந்தந்த எண்ணெய் நிறுவனங்களேஉயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்து விட்டது. அதன் காரணமாக கடந்தஓராண்டுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, டீசல் விலையையும் உயர்த்த வேண்டும் என எண்ணெய்நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. டீசல் விற்பனையால் ..சி., பாரத்பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.128 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, டீசல் விலையைஉயர்த்த வேண்டும் அல்லது எண்ணெய் நிறுவனங்களே விலையை உயர்த்தஅனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
பெட்ரோலை போல டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தஅனுமதித்தால் லாரி வாடகை உயரும். அதனால், அத்தியாவசியபொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். அதன் காரணமாக, டீசல்விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவது குறித்து மத்திய மந்திரிகள் குழுகூட்டத்தில் கடந்த மாதம் ஆலோசிக்கப்பட்டது. இரண்டு முறை விவாதம்நடந்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, எதிர்பார்க்காத அளவுக்கு உணவுப் பொருட்களின் பணவீக்கம்சதவீதமாக உயர்ந்துவிட்டது. அதன் விளைவாக ஒட்டு மொத்த பணவீக்கமும் கணிசமாக அதிகரித்தது. எனினும், ஒட்டு மொத்த பணவீக்கத்தின்அளவானது மார்ச் மாதத்துக்குள் 6 முதல் 6.5 சதவீதத்துக்குள் வந்து விடும் எனமத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 14.44
இதைத் தொடர்ந்து, டீசல் விலை உயர்வையும் மார்ச் இறுதி வரை ஒத்திவைக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிரதமரின் பொருளாதாரஆலோசனை குழு நேற்று தெரிவித்தது.
குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறுகையில், "ஒருவேளை, இந்த ஆண்டுஇறுதிக்குள் 6 சதவீதத்துக்கு பணவீக்கத்தின் அளவு குறைந்தால் டீசல்விலையை உயர்த்துவதற்கான நேரம் வந்து விட்டதாக கருதலாம். சர்வதேசசந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலை சரிசெய்யப்படும் சாத்தியமும் உள்ளது'' என்றார். (2011)

பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி திரும்பினார்; மு.க.ஸ்டாலின் வழியனுப்பினார

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன.4-
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம்டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்றுகாட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாடு முடிந்ததும்அங்கிருந்து கார் மூலம் போர்டு கார் தொழிற்சாலை வளாகத்தைவந்தடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைமீனம்பாக்கம் விமானம் நிலையத்திற்கு பகல் 12.05 மணிக்கு வந்து சேர்ந்தார். பிரதமருடன் துணை முதல்-மந்திரி மு..ஸ்டாலின், மத்திய மந்திரி.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, தயாநிதிமாறன் ஆகியோர் வந்தனர். 98-
இதன் பின்பு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, துணை முதல்-மந்திரிமு..ஸ்டாலின் மலர் செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், சென்னைமாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள்ஆற்காடு வீராசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், தங்கம் தென்னரசு, தமிழககாங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தலைமைச்செயலாளர் மாலதி, எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி ஜே.எம்.ஆருண், எம்.எல்..க்கள் யசோதா, ராணிவெங்கடேசன், மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச்செயலாளர்எஸ்.கே.. அகமது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வழியனுப்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் தனி விமானம்மூலம் பகல் 2.30 மணிக்கு டெல்லி திரும்பினார். பிரதமருடன் மத்திய மந்திரி.சிதம்பரம் உடன் சென்றார்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz