Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.
Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Tuesday, January 4, 2011

பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி திரும்பினார்; மு.க.ஸ்டாலின் வழியனுப்பினார

Be the first to comment!
Labels:
சென்னை, ஜன.4-
பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம்டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்றுகாட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாடு முடிந்ததும்அங்கிருந்து கார் மூலம் போர்டு கார் தொழிற்சாலை வளாகத்தைவந்தடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைமீனம்பாக்கம் விமானம் நிலையத்திற்கு பகல் 12.05 மணிக்கு வந்து சேர்ந்தார். பிரதமருடன் துணை முதல்-மந்திரி மு..ஸ்டாலின், மத்திய மந்திரி.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, தயாநிதிமாறன் ஆகியோர் வந்தனர். 98-
இதன் பின்பு பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, துணை முதல்-மந்திரிமு..ஸ்டாலின் மலர் செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், நெப்போலியன், சென்னைமாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள்ஆற்காடு வீராசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், தங்கம் தென்னரசு, தமிழககாங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, தலைமைச்செயலாளர் மாலதி, எம்.பி.க்கள் வசந்தி ஸ்டான்லி ஜே.எம்.ஆருண், எம்.எல்..க்கள் யசோதா, ராணிவெங்கடேசன், மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச்செயலாளர்எஸ்.கே.. அகமது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வழியனுப்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் தனி விமானம்மூலம் பகல் 2.30 மணிக்கு டெல்லி திரும்பினார். பிரதமருடன் மத்திய மந்திரி.சிதம்பரம் உடன் சென்றார்.

Tuesday, December 21, 2010

சிகிச்சை பெற மறுப்பு: சந்திரபாபுநாயுடு உடல்நிலை மோசம் அடைந்தது; மஞ்சள் காமாலை தாக்கியது

Be the first to comment!
Labels:
தெலுங்குதேசம் கட்சி தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஐதராபாத்தில் கடந்த 17-ந்தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து போலீசார் நேற்று காலை அவரை கைது செய்து குண்டு கட்டாக தூக்கி நிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாரை தடுத்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
சந்திரபாபுநாயுடு கைதானதை கண்டித்து நேற்று ஆந்திராவில் தெலுங்குசேம் கட்சி பந்த் நடத்தியது. இதில் ஏராளமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
சந்திரபாபுநாயுடு நிம்ஸ் ஆஸ்பத்திரியில் 10-ம் எண் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை சிகிச்சை பெறமாட்டேன் என்று மறுத்து வருகிறார். திரவ உணவும் உட்கொள்ள மறுக்கிறார். இதனால் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது.
இன்று காலை டாக்டர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் சந்திரபாபு நாயுடுவை பரிசோதித்தனர். இதில் அவரை மஞ்சள் காமாலை தாக்கி இருப்பது தெரியவந்தது. ஆனாலும் சந்திரபாபுநாயுடு சிகிச்சை பெற மறுத்து வருகிறார்.
அவரது அருகில் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் அமர்ந்து கவனித்து வருகிறார்கள்.
டாக்டர்கள் மற்ற யாரும் சந்திரபாபுநாயுடுவை பார்க்க வரவேண்டாம் என்று கூறி உள்ளனர். இதனால் அவரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த தெலுங்குதேசம் முக்கிய பிரமுகர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.
சந்திரபாபுநாயுடு அனுமதிக்கப்பட்டுள்ள நிம்ஸ் ஆஸ்பத்திரியை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பலாக திரண்டு வந்த தொண்டர்களை விரட்டி அடித்து வருகிறார்கள்.
ஐதராபாத்தில் அசம்பா விதம் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz