Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Friday, December 9, 2011

இதய பகைவன் `புகை'யை பற்றி சில உண்மைகள்

Be the first to comment!
Labels:
1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அதில் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ். நீரின் கொதி நிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்ப நிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடு 2-8 சதவீதம் செறிவு இருக்கிறது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நிகோடின் பெரும் நச்சுக்கலவை. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.





6. நினைவிருக்கட்டும், மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும்போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம், மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும், குழந்தை அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்றவரைக் காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட ஹார்ட் அட்டாக் வரும் இளைஞர்கள் சிறு வயது முதலே "Passive Smoking'' என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட் புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட் புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வரை தினம் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

*என்றும் தேசத்திற்காக
Amazing Tamilnadu

Thursday, July 14, 2011

மும்பை குண்டுவெடிப்பு துணுக்குகள்...

Be the first to comment!
Labels:
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்றிரவு மும்பை விரைந்தார். குண்டு வெடித்த இடங்களுக்கு சென்று நேரில் பார்த்து ஆய்வு செய்தார். பிறகு மருத்துவமனைக்கு சென்று குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இன்று காலை 10 மணிக்கு மும்பையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். குண்டு வெடிப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

மும்பை குண்டு வெடிப்பில் பலியான 18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மராட்டிய மாநில முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார். காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகளில் சிக்கி 133 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மும்பையில் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து மும்பையில் அதிரடிப்படை போலீசார் உஷாராக வைக்கப்பட்டிருந்தனர். இதனால் தான் குண்டு வெடித்த சில நிமிடங்களுக்குள், சம்பவ இடத்துக்கு அதிரடிப்படை போலீசாரால் வர முடிந்தது.

உளவுத் துறை எச்சரித்ததை ஒத்துக்கொண்ட மும்பை போலீசார், குண்டு வெடிப்பு எப்படி, எங்கு நடைபெறும் என்பதை கணிக்க முடியாததால், நாசவேலையை தடுக்க முடியவில்லை என்றனர்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் இன்று காலை இது தொடர்பாக கூறுகையில், மும்பை குண்டு வெடிப்புக்காக உளவுத்துறையை குறை சொல்ல இயலாது என்றார். மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாக மும்பை குண்டு சம்பவம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு, ஐக்கிய அரபு எமிரேட், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மும்பை குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் தீவிரவாதிகளால் அதிக தடவை பாதிப்புக்கு உள்ளான நகரம் என்ற சோதனையை மும்பை சந்தித்துள்ளது. மும்பையில் இதுவரை 8 தடவை தாக்குதல் நடந்துள்ளது. தற்போது 9-வது தடவையாக நாசவேலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த 9 குண்டு வெடிப்புகளில் சிக்கி மொத்தம் 681 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு முதன் முதலாக தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 12-ந் தேதி 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர்.

2002-ல் டிசம்பர் 2-ந் தேதி நடந்த தாக்குதலில் 2 பேர் செத்தனர். 4 நாள் கழித்து டிசம்பர் 6-ந் தேதி நடந்த மற்றொரு தாக்குதலில் 11 பேர் காயம் அடைந்தனர். 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி நடந்த 4-வது தாக்குதலில் 30 பேர் காயம் அடைந்தனர். 5-வது தாக்குதல் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி நடந்தது. அதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி நடந்த தாக்குதலில் 46 பேர் செத்தனர். 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி 7 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் 181 பேர் பலியானார்கள். 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது 166 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடந்துள்ளது.

இந்திய நகரங்களில் மும்பை நகரில் மட்டும் தீவிரவாதிகள் மீண்டும், மீண்டும் குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மும்பை நகரம் மக்கள் நெரிசல் மிகுந்த நகரமாகும். இது தீவிரவாதிகளுக்கு ஏற்றதாக உள்ளது. மற்றும் மும்பை நகரின் பூகோள அமைப்பும் தீவிரவாதிகளுக்கு சாதகமாக உள்ளது.

மேலும் இந்திய முஜாகிதீன்களின் ரகசிய குழு அங்குதான் மிகவும் வலுவாக உள்ளது. எனவே அதிக இழப்பு ஏற்படுத்தும் வகையில் தீவிரவாதிகளால் குண்டு வைக்க முடிகிறது. இவை அனைத்துக்கும் மேலாக மும்பை நகரம் இந்திய பொருளாதார தலை நகரமாக இருப்பதும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய காரணமாகும்.

மும்பையில் தொடர்குண்டு வெடிப்புகளை நடத்தினால் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும். அதே சமயத்தில் உலகின் கவனத்தையும் கவர முடியும். இத்தகைய காரணங்களால் தான் மும்பையை தேர்வு செய்து தீவிரவாதிகள் குண்டு வைக்கிறார்கள்.

மும்பையில் இதுவரை 9 தடவை நடந்த குண்டு வெடிப்புகளில் 3 தடவை ஜவேரி பஜாரில் குண்டுகள் வெடித்தன. இந்த பஜார் தங்க, வைர கடைகள் நிறைந்த பகுதியாகும். பெரும்பாலான கடைகளை குஜராத் மாநில கோடீசுவரர்களே இங்கு வைத்துள்ளனர். அடிக்கடி அவர்களை குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒபரா ஹவுசில் வெடித்த குண்டுதான் சக்தி வாய்ந்த குண்டாகும். மும்பையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி காயம் அடைந்த 133 பேரும் மருத்துவமனைகளுக்கு தூக்கி செல்லப்பட்ட போது மருத்துவமனை ஊழியர்கள் திணறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதிக பேருக்கு சிகிச்சை அளிக்க முடியாததால், வேறு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுங்கள் என்றே எல்லா மருத்துவமனைகளிலும் கூறப்பட்டது. இதனால் காயம் அடைந்தவர்கள் ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அலைய நேரிட்டது. பேரழிவு ஏற்படும் போது, மின்னல் வேகத்தில் செயல்பட முடியாமல் மராட்டிய நிர்வாகம் திணறியது.

மும்பையில் நேற்று தாதர் பகுதியில் குண்டு வெடித்த போது 400 மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். குண்டு வெடிப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு தான் 400 மாணவ-மாணவிகளும் அந்த தெருவை கடந்து சென்றனர். அந்த சமயத்தில் குண்டு வெடித்திருந்தால் நெஞ்சை பதற வைக்கும் வகையில் நாசவேலை மாறி இருக்கும். அதிர்ஷ்டவசமாக இளம் பிஞ்சுகள் உயிர் தப்பி உள்ளனர்.

மும்பையில் நேற்று நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட 3 குண்டுகளும் அம்மோனியம் நைட்ரேட் கலவையில் தயாரிக்கப்பட்டிருந்தது. மும்பையிலேயே இந்த குண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். புனே, டெல்லியில் உள்ள இந்திய முஜாகிதீன்கள் இந்த வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளனர்.

Tuesday, July 12, 2011

TN govt introduces new medical insurance scheme

Be the first to comment!
Labels:
Chennai: Scrapping yet another initiative of the erstwhile DMK regime, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Monday announced an improved medical insurance cover under which a family can derive a maximum benefit of Rs four lakh for four years.

The new scheme would cover 950 types of medical treatment as against the previous government's scheme of 642 types, Jayalalithaa said, as she hit out at DMK, saying its scheme had benefited only private insurance firms and private hospitals.

"Under the new scheme, a family can avail medical benefits of upto Rs four lakh for four years while it was Rs one lakh for four years according to the previous scheme," she said.

The new scheme also allots Rs 1.50 lakh per year for some specific diseases, Jayalalithaa said in a statement.

The Kalaignar Insurance Scheme, named after then Chief Minister M Karunanidhi by the DMK regime, had envisaged offering medical services free of cost to persons with annual income of Rs 72,000.

Jayalalithaa said expenses on certain tests prior to and after surgeries would also be covered under the new scheme, "which were not there in the previous scheme."

Jayalalithaa, without naming the Kalaignar Insurance Scheme, said it had fallen short of meeting people's health needs completely.

After assuming power, Jayalalithaa had discarded the flagship scheme of the previous DMK regime, that of supplying colour TV sets free of cost, besides freezing construction of the New Assembly Complex, pending enquiry.

Her government has set up an Enquiry Commission to probe into alleged irregularities and "inordinate delay," in construction of the near Rs 1,000 crore structures.

The Jayalalilthaa government had announced in the Governor's address on July 3 that a new insurance scheme to achieve quality medical services for all would be launched. The scheme would be expanded to government hospitals to ensure delivery of better medical services, she said, adding they would also be provided the full amount like private hospitals.

"Further, some treatment will be available only in government hospitals. Special wards will be created for this purpose, thus making more people utilize the services of government-run hospitals," she said.

With the new scheme likely to take some time to be introduced, status quo would continue for certain life-saving treatments in private hospitals, she said, adding the government would directly pay expenses for these treatments to the respective hospitals.

Monday, July 11, 2011

CB-CID crack Dilshan murder case; accused held

Be the first to comment!
Labels:
Chennai: The mystery over the killing of a 13-year-old boy due to gunshot wounds inside the Army campus was resolved on Sunday with the arrest of a retired senior Army officer who confessed to his involvement in the incident which kept the city police on its toes for a week.

The Tamil Nadu Police Crime Branch, after a week-long investigation, arrested the 58-year-old retired Lt Col Kandaswamy Ramraj, a native of Madurai, who has been booked under Section 302 (relating to murder) of IPC.

"We have got a major breakthrough in the Dilshan murder case. We confronted the retired Army officer with physical witnesses and evidences which made him to confess," CB-CID ADGP R Sekar told reporters on the killing of Dilshan who fell to the bullet when he trespassed into the Army residential quarters last Sunday to pluck mangoes and almonds.

Stating that the retired Army officer got annoyed by the frequent trespassing of the boys to pluck mangoes and almonds, he said, "this led him to shoot from his rifle from a balcony at the time of incident".

Sekar said that though initially police came to know there were only three children at the time of incident it later came to light that there was a fourth boy who informed them about a senior Army man who tried to erase the evidence, he said.

With the help of the fourth boy, police could zero in on Ramraj who initially refused to admit that he owned a licensed weapon but later confessed that he had applied for the renewal of license with the suburban police, he said.

"He has got the 0.3mm rifle from Jabalpur in 2004 and the license was valid till 2008. But since then he had not renewed the license and recently, he had applied for the renewal at the suburban police. Even the Army personnel did not know he was holding a rifle without license," he said.

Ramraj, an Assistant Engineer (Arms section), admitted that he threw the rifle in the Cooum river here along with the bullets, Sekar said.

"With the help of fire tenders we were able to recover the weapon imported from United States and efforts are on to locate the bullets," he said, adding that the car used for hiding the weapon was also seized.

Sekar said Ramraj would be produced in the George Town Special Court later today.

Dilshan, residing in the Indira Gandhi Nagar locality adjacent to the Army quarters in the Island Grounds locality, fell victim to a mysterious bullet when he tried to pluck almond fruit from the army residential area.

The victim's family had alleged he was shot by an Army personnel.

The post-mortem report had earlier established that a bullet injury had killed Dilshan when he scaled the Army campus.

An Army officer in the rank of Lt Colonel and some others were questioned in the past few days in connection with incident.

Condemning the incident, Chief Minister Jayalalithaa had said the teenager was killed by an Army jawan and had written to the General Officer Command requesting that the culprit be handed over to the state police.

Friday, July 1, 2011

இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் நியமனம்

Be the first to comment!
Labels:
புதுடெல்லி, ஜூலை.1-

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக திமோதி ஜி.ரோமர் பணியாற்றி வந்தார். அவரது பதவி காலம் முடிந்தது. எனவே புதிதாக தூதர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
பீட்டர் புர்லேக்


இந்த நிலையில் இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்க தூதராக பீட்டர் புர்லேக் இன்று நியமிக்கப்பட்டார். நிரந்தர தூதர் நியமிக்கப்படும் வரை இவர் தூதர் பணிகளை டெல்லியில் கவனிப்பார்.

இந்த நியமனத்தை, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அறிவித்து இருக்கிறார். தற்காலிக தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் பீட்டர் புர்லேக், வங்காள மொழி, இந்தி, நேபாள மொழி, சிங்கள மொழி ஆகியவற்றை திறம்பட பேசக்கூடியவர். வெளி உறவுத்துறை செயல்பாடுகளில் அதிக அனுபவம் கொண்டவர்.

Thursday, June 30, 2011

பிரதமருடன் தயாநிதிமாறன் சந்திப்பு: தயாநிதி மாறன் பதவி விலகல்?

Be the first to comment!
Labels:
புதுடெல்லி, ஜூன்.30-


பிரதமர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று இருக்கும்  நிலையில்  மத்திய  ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

மேலும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படக்கூடும்  என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில்  முன்னாள் தொலைதொடர்ப்பு  அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரத்தை, அமைச்சர்கள் குழுவிடமிருந்து தொலைத் தொடர்புத்துறைக்கு மாற்றினார்.


ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை மாற்றியதில் மாறன் முக்கியப் பங்காற்றியுள்ளார்.  இந்த விவகாரத்தில் முதலில் அவரைத்தான் தீவிரமாக விசாரிக்க வேண்டும்  என நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி  தெரிவித்துள்ளார்.


2006 -2008 ஆண்டு காலத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் வாங்கியவுடன், உடனடியாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கிடைத்தது. மாறன்தான் இதன் பின்னணியில் இருப்பதாக ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன்  குற்றம் சாட்டினார்.

மேலும் இதுகுறித்து 2011 ஜூன் 6-ம்தேதி சிபிஐ  சிவசங்கரனின் வாக்குமூலத்தை பதிவுசெய்தது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் தவறு ஏதும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே 3-வது குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பற்றி இந்த குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஸ்பெக்ட்ரம் ஊழலை முதன் முதலாக தொடங்கி வைத்த ஒரு முக்கியப் புள்ளி பற்றியும் 3-வது குற்றப்பத்திரிகையில் தகவல்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பெயர் அடிபடத் தொடங்கியதையடுத்து அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய  அமைச்சர் தயாநிதி மாறன் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியது முக்கியமானதாக கருதபடுகின்றது.

Tuesday, May 17, 2011

தாம்பரம் படப்பையில் உள்ள நடிகர் வடிவேலு பண்ணை வீட்டில் தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு

Be the first to comment!
Labels:
சட்டமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் பண்ணை வீட்டில் திடீர் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த பண்ணை வீடு தாம்பரம் அருகேயுள்ள படப்பை புஷ்பகிரி பகுதியில் இருக்கிறது. மாமர தோப்புகள் மத்தியில் இவ்வீடு கட்டப்பட்டு உள்ளது. பண்ணை வீட்டில் வேலு என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.இவர் தனது குடும்பத்தினருடன் தோப்பில் தனி வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை இந்த பண்ணை வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்தனர். வீட்டில் 6 கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினார்கள். காவலாளி வேலுவுக்கும் மிரட்டல் விடுத்தனர். அவரிடம் வடிவேலுவின் செல்போன் நம்பரை கொடுக்குமாறு கேட்டனர். அவர் தெரியாது என்றார்.

உடனே மர்ம ஆசாமிகள் வேலுவின் செல்போனை வாங்கி அதில் வடிவேலு நம்பர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அதில் வடிவேலு எண் இல்லாததால் மீண்டும் அதை வேலுவிடம் கொடுத்தனர்.வருகிற சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்து விடவேண்டும். இல்லா விட்டால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டார்கள். இது குறித்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சிறு ஆபரேஷன் மூலம் ரஜினிக்கு நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றம்: குணம் அடைவதாக டாக்டர்கள் பேட்டி

Be the first to comment!
Labels:
சென்னை, மே. 17-

ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

சி.டி. ஸ்கேன் உள்பட பல் வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி இருந்ததால் அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது. காய்ச்சல், சளிக்கும் மருந்து கொடுத்தனர்.

நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறு ஆபரேஷன் மூலம் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

நேற்று ரஜினிக்கு நெஞ்சில் லேசான ஆபரேஷன் நடந்தது. இதன் மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு ரஜினி குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரஜினிக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் மருத்துவ செய்தி குறிப்பில் தெரி உள்ளது.

விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டது.

ரஜினியுடன் வார்டில் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை பற்றி நேற்றும், இன்றும் மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.

ரஜினி உடல் நிலைபற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு இருந்தனர். சில ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டு வாசலிலேயே காத்து கிடக்கின்றார்கள். ரஜினி வெளியே வந்து தோன்ற வேண்டும் அல்லது வீடியோ மூலம் அவரைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

Be the first to comment!
Labels:
சென்னை, மே.17-

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா நேற்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Thursday, May 12, 2011

Barc Facilities, Kalpakkam invites application for Stipendiary Trainees (Category II) for training in BARC Facilities, Kalpakkam

Be the first to comment!
Labels:
Download here
***
-----------
***

Monday, May 9, 2011

TN BOARD RESULTS (12th results direct link) +2 RESULTS

Be the first to comment!
Labels:
*************
+2 RESULTS DIRECT LINK
*************
TN BOARD RESULTS
*************
12th RESULTS
*************

Friday, May 6, 2011

கனிமொழி முன் ஜாமீன் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

Be the first to comment!
Labels:

புதுடெல்லி, மே.6-
  
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடநத மாதம் 25-ந்தேதி  டெல்லி நீதிமன்றத்தில்  சி.பி.ஐ. சார்பில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கலைஞர் டி.வி. பங்குதாரர் என்ற முறையில் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. இயக்குனர்களில் ஒருவரான சரத்குமார் ஆகியோரது பெயர்கள்  அந்த குற்றப்த்திரிகையில் இடம் பெற்றிருந்தன.    

இதனையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கனிமொழி உள்பட 14 பேருக்கு மே6-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது அதனை தொடர்ந்து கனிமொழி கடந்த புதன்கிழமை டெல்லி சென்றார். கடந்த இரண்டு நாட்களாக அவர் சட்ட ரீதியாக எதிர் கொள்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.    

பின்னர் இன்று (மே-6) காலை 9.30 மணிக்கு கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ  நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்  மேலும் தி .மு க  எம்.பிக்கள் 5 பேர் உடன் சென்றார். 10 மணிக்கு உள்ளே சென்ற கனிமொழி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்னிலையில் ஆஜர் ஆனார்.     

இவ்வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. சார்பில் மூத்த வக்கீல்  ராம்ஜெத் மலானி ஆஜரானார்.   

அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைக்கேடுக்கும் கனிமொழி எம்.பி.க்கும் எந்த தொடர்பும் இல்லை கலைஞர் தொலைக்காட்சியில்  அவர் ஒரு பங்குதாரர் மட்டுமே அதுவும் அவரிடம் பெரும்பாலான பங்குகள் கூட இல்லை 20 சதவீத பங்கு மட்டும் உள்ளது.   மற்றபடி எந்த விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு கிடையாது. மேலும் கலைஞர் டி.வி. தினசரி நடவடிக்கைகள் எதிலும் கனிமொழி தலையிடுவது இல்லை. அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி செய்தாக கூறுவது தவறு.     

சதி குற்றச்சாட்டுகளில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா பெயர் தான் இடம் பெற்றுள்ளது. கனிமொழி பெயர் எதிலும் இல்லை எனவே சதி செயல்களுக்கு ராசா மட்டுமே பொறுப்பாவார்.    

பின்னர் இந்திய குற்றவியல் சட்டபிரிவு 437-ன்படி பெண்கள், முதியோர், குழந்தைகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கனிமொழி எம்.பிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார்.    

இதை தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணை 2 மணியளவில் தொடங்கியது  அதில்  சி.பி.ஐ தரப்பு வக்கீல் லலித் வாதாடினார். அதில் கனிமொழி எம்.பியிடம் சில கேள்விகள் கேட்டார் கனிமொழி எம்.பி. 2ஜி ஊழலுக்கு உடந்தையாக  இருந்து உள்ளார்.அதற்கு ஆதாரங்கள் உள்ளது.   

மேலும் எம்.பியாக இருந்து கொண்டு இவ்வாறு ஊழல் செய்தது அப்பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதாக  உள்ளது .   இதற்காக இந்திய குற்றவியல் சட்டபிரிவு  120பி-ன்படி  ஊழலுக்கு உடந்தையா இருந்ததற்கு அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.     

இந்நிலையில் கனிமொழியின் முன் ஜாமீன் மனு  மீதான விசாரணையை டெல்லி நீதிமன்றம் நாளை வரை ஒத்தி வைத்துள்ளது. ஆனால் ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஜாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோருக்கு முன் ஜாமீன் தர டெல்லி நிதிமன்றம் மறுத்துள்ளது.   

மேலும்   நேற்று தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சட்டப்படி எதிர் கொண்டு இவ்வழக்கிலிருந்து வெளிவருவேன் என்றும்   என் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு கடுமையானது   அந்த  கடும் நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கின்றேன் என்றும்  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்  முன் ஜாமினுக்கு தாக்கல் செய்ய  விரும்பவில்லை  என்று  தெரிவித்திருந்தார் 

இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கனிமொழி . மாலையில் விசாரணை முடிந்து வெளியே வந்த போது  அவரது கணவர் அரவிந்தன் உடன் வந்தார். ஆனால்  பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிகள்  கேட்ட கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல்  அமைதியாக காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.  

Tuesday, May 3, 2011

“மங்காத்தா” படப்பிடிப்பில் நடிகர் அஜீத் காயம்

Be the first to comment!
Labels:
தாராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது,

தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார் என்றார்.

புனே அணியில் ஒப்பந்தம்:ஐ.பி.எல். போட்டியில் கங்குலி ஆடுகிறார்;

Be the first to comment!
Labels:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கங்குலி. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். 4-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது கோபம் அடைந்தனர். கொச்சி அணியில் கங்குலி விளையாடுவார் என்று கூறப்பட்டு அது பின்னர் உறுதியாகவில்லை. 

இந்த நிலையில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார். காயம் அடைந்த நெக்ராவுக்கு பதிலாக அவர் புனே அணியில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுதொடர்பாக புனே வாரியர்ஸ் அணியின் இயக்குனர் அபிஜித் சர்கார் கூறும்போது,

நெக்ராவின் உடல் தகுதி அறிக்கைக்காக காத்திருந்தோம். அந்த அறிக்கை நேற்று வந்து விட்டது. நாங்கள் ஏற்கனவே கங்குலியுடன் பேசிவிட்டோம். அவரது அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே நேற்று இரவு கங்குலியை புனே அணியில் இறுதி செய்தோம் என்றார். ஐ.பி.எல். போட்டியில் கங்குலி விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி: வாலிபர் கைது

Be the first to comment!
Labels:
 
சென்னை, மே. 3-

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணிமாறன், நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன், ராணிப்பேட்டை பாலாஜி ஆகியோர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா விடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் ஜான்நியூ பினோத் என்பவர் ஜெர்மனி, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினார். பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வசேகர், சப்- இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.   தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று நண்பகல் தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் நியூ பினோத்தை பிடித்து விசாரணை செய்ததில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார்.

மேலும் விசாரணையில் தானும், தனது நண்பர் சலீம் என்பவரும் சேர்ந்து இதே போல் கடலூரிலும் 75-க்கும் மேற்பட்டவர்களிடம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, போலியான விமான பயணச்சீட்டு, விசா, வேலைக்கான உத்தரவு ஆகியவற்றை தயார் செய்து கொடுத்து ஏமாற்றி விட்டு, தலைமறைவாகியதாக கூறி னார்கள்.

கைது செய்யப்பட்ட ஜான் நியூ பினோத் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Friday, April 29, 2011

ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்: பிரதீபா பட்டீல் அறிவிப்பு

Be the first to comment!
Labels:
இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் ஜனாதிபதியாக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்று பிரதீபா பட்டீலிடம் இன்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ``நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

Official Press Release : Ajith Dissolves His Fan Clubs

1 Comment so far
Labels:

Tuesday, April 5, 2011

கோவையில் 6 ந் தேதி ஒரே மேடையில் ஜெயலலிதா விஜயகாந்த் பிரசாரம்; கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பங்கேற்பு

Be the first to comment!

காங் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் 6 ந்தேதி ராகுல் பிரசாரம்

Be the first to comment!

கல்வீச்சுக்கு நான் அஞ்சமாட்டேன்; நடிகர் வடிவேலு ஆவேசம்

Be the first to comment!

Thursday, March 17, 2011

விஜயகாந்த் தலைமையில் 3 வது அணி அமையுமா? நாளை தெரியும்

Be the first to comment!
Labels:

சென்னை:  
அதிமுக தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் கடும் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள், 3வது அணி அமைப்பது குறித்து இன்று அவசர ஆலோசனை நடத்தின. மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், சேதுராமன், கிருஷ்ணசாமி, கதிரவன் ஆகியோர் தேமுதிக அலுவலகத்துக்கு சென்று விஜயகாந்த்தை சந்தித்தனர். 3&வது அணிக்கு தலைமை ஏற்குமாறு விஜயகாந்தை அவர்கள் வலியுறுத்தினர். வேட்புமனு தாக்கலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, சமக, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், குடியரசு கட்சி  ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருந்தன. 2006 சட்டசபை தேர்தலில் இருந்தே அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு, இந்த தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் ஆரம்பத்தில் இருந்தே இழுபறி ஏற்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. இது அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிதநேய மக்கள் கட்சி&3, புதிய தமிழகம்&2, சமக&2, பார்வர்டு பிளாக், குடியரசு கட்சி தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்கு பிறகு மார்க்சிஸ்ட்டுக்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. அதிமுகவுக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலேயே ஓரங்கட்டியது.

மதிமுகவுக்கு 2006 தேர்தலி¢ல் 35 தொகுதிகளை வழங்கிய அதிமுக, இம்முறை 8&க்கு மேல் கிடையாது என கூறியது. இதனால் மதிமுக கூடாரமும் அதிர்ச்சியில் உறைந்தது. தொகுதி பங்கீடு முடிந்தாலும் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை அப்படியே ஒதுக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருந்தனர். மதிமுக நிலை குறித்து விவாதிக்க கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தை நாளை மறுநாள் வைகோ கூட்டியுள்ளார்.

இந்நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் குழுக்கள், அதிமுக குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் பேசிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அவசரமாக வெளியிட்டார். தொகுதி பட்டியலை பார்த்ததும் தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளும், தற்போது போட்டியிட விரும்பிய தொகுதிகளும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

 தேமுதிக கேட்டிருந்த தொகுதிகளில் 21 இடங்களை அதிமுக பறித்துக்கொண்டதால் அக்கட்சியினர் கொதித்துப் போயுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற 9 தொகுதிகளில் 7 இடங்களை அதிமுக எடுத்துக் கொண்டது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்
பட்டுள்ளனர்.

புதிய தமிழகம் சார்பில் ஓட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் இரண்டை ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த நான்கு தொகுதிகளையும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளது. இப்படி, கூட்டணி கட்சிகள் கேட்ட எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளதால் அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் அதிமுக கூட்டணியில் இருந¢து தேமுதிக, இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் வெளியேறுவது குறித்து ஆலோசனை நடத்தின. தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் இன்று காலை தீவிர ஆலோசனை நடத்தினார். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டு பிளாக் செயலாளர் கதிரவன் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், 3&வது அணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் தலைவர்கள் அனைவரும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். ஒரு காரில் ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் முதலில் வந்தனர். அவர்களை தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர். ‘தன்மானம் காக்க 3&வது அணி அமைப்போம்என கோஷமிட்டனர். அதைத் தொடர்ந்து சேதுராமன், கிருஷ்ணசாமி, கதிரவன் வந்தனர். பின்னர் 5 பேரும் விஜயகாந்துடன் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, 3வது அணிக்கு தலைமை ஏற்குமாறு விஜயகாந்திடம் தலைவர்கள் வற்புறுத்தினர். தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் ஸ்ரீவில்லிபுத்தூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஆலங்குடி உள்ளிட்ட 6 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளிலும் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியுடன் கட்சி நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாமல்தான் இருந்தது. இப்போது அந்த அதிருப்தி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று நடக்கும் அவசர கூட்டத்தில் நல்ல முடிவை எடுப்போம்ÕÕ என்றார்.

தேமுதிக மாநில நிர்வாகி கூறியதாவது: "தேமுதிகவை பொறுத்தவரை விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் எங்களை சமரசம் செய்து கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் நாங்கள் கேட்பதை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் இந்தளவு குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதிமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் ஆலோசித்து வருகிறோம். எங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம்ÕÕ என்றார். ஒருவேளை மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில், ஏற்கனவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள பா.., ஐஜேகே, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் அதிமுக அதிருப்தி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதிமுகவில் மவுனம் + இறுக்கம்

அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெளியேறி, 3&வது அணி அமைப்பது குறித்த ஆலோசனையை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியலே பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுகவிலோ எதுவும் நடக்காததுபோல அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் எதுவும் அதிமுகவால் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக அணியில் முன்னணி தலைவர்கள் இறுக்கத்துடனேயே காணப்பட்டனர்.

3வது அணியில் சேர  வைகோவுக்கு அழைப்பு

வைகோ இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விஜயகாந்துடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் வைகோவுடன் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 3வது அணிக்கு வரும்படி அவருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும், 3வது அணி பேச்சில் பங்கேற்க வருவார் என்றும் சொல்லப்படுகிறது.

ஜெ. உருவபொம்மை: தேமுதிகவினர் எரிப்பு

தேமுதிக அலுவலகத்தில் இன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். Ôதன்மானம் காக்க தலைமை ஏற்க வா தலைவாÕ, ‘மதியார் தலைவாசல் மிதியாதேஎன்று கோஷம் எழுப்பினர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, தேமுதிக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை கொண்டு வந்து கட்சி அலுவலகம் முன்பு எரித்தனர். அப்போது ஜெயலலிதாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz