இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கங்குலி. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். 4-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
இதனால் அவரது ரசிகர்கள் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது கோபம் அடைந்தனர். கொச்சி அணியில் கங்குலி விளையாடுவார் என்று கூறப்பட்டு அது பின்னர் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார். காயம் அடைந்த நெக்ராவுக்கு பதிலாக அவர் புனே அணியில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுதொடர்பாக புனே வாரியர்ஸ் அணியின் இயக்குனர் அபிஜித் சர்கார் கூறும்போது,
நெக்ராவின் உடல் தகுதி அறிக்கைக்காக காத்திருந்தோம். அந்த அறிக்கை நேற்று வந்து விட்டது. நாங்கள் ஏற்கனவே கங்குலியுடன் பேசிவிட்டோம். அவரது அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே நேற்று இரவு கங்குலியை புனே அணியில் இறுதி செய்தோம் என்றார். ஐ.பி.எல். போட்டியில் கங்குலி விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது கோபம் அடைந்தனர். கொச்சி அணியில் கங்குலி விளையாடுவார் என்று கூறப்பட்டு அது பின்னர் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார். காயம் அடைந்த நெக்ராவுக்கு பதிலாக அவர் புனே அணியில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுதொடர்பாக புனே வாரியர்ஸ் அணியின் இயக்குனர் அபிஜித் சர்கார் கூறும்போது,
நெக்ராவின் உடல் தகுதி அறிக்கைக்காக காத்திருந்தோம். அந்த அறிக்கை நேற்று வந்து விட்டது. நாங்கள் ஏற்கனவே கங்குலியுடன் பேசிவிட்டோம். அவரது அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே நேற்று இரவு கங்குலியை புனே அணியில் இறுதி செய்தோம் என்றார். ஐ.பி.எல். போட்டியில் கங்குலி விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Confused? Feel free to ask