Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Tuesday, May 3, 2011

புனே அணியில் ஒப்பந்தம்:ஐ.பி.எல். போட்டியில் கங்குலி ஆடுகிறார்;

Be the first to comment!
Labels:
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கங்குலி. கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். 4-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இதனால் அவரது ரசிகர்கள் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் மீது கோபம் அடைந்தனர். கொச்சி அணியில் கங்குலி விளையாடுவார் என்று கூறப்பட்டு அது பின்னர் உறுதியாகவில்லை. 

இந்த நிலையில் கங்குலி புனே வாரியர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார். காயம் அடைந்த நெக்ராவுக்கு பதிலாக அவர் புனே அணியில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுதொடர்பாக புனே வாரியர்ஸ் அணியின் இயக்குனர் அபிஜித் சர்கார் கூறும்போது,

நெக்ராவின் உடல் தகுதி அறிக்கைக்காக காத்திருந்தோம். அந்த அறிக்கை நேற்று வந்து விட்டது. நாங்கள் ஏற்கனவே கங்குலியுடன் பேசிவிட்டோம். அவரது அனுபவம் அணிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே நேற்று இரவு கங்குலியை புனே அணியில் இறுதி செய்தோம் என்றார். ஐ.பி.எல். போட்டியில் கங்குலி விளையாடுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி: வாலிபர் கைது

Be the first to comment!
Labels:
 
சென்னை, மே. 3-

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணிமாறன், நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன், ராணிப்பேட்டை பாலாஜி ஆகியோர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா விடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் ஜான்நியூ பினோத் என்பவர் ஜெர்மனி, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் வாங்கினார். பின்னர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வசேகர், சப்- இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.   தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், நேற்று நண்பகல் தாம்பரம் கேம்ப் ரோடு பகுதியில் பதுங்கி இருந்த ஜான் நியூ பினோத்தை பிடித்து விசாரணை செய்ததில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார்.

மேலும் விசாரணையில் தானும், தனது நண்பர் சலீம் என்பவரும் சேர்ந்து இதே போல் கடலூரிலும் 75-க்கும் மேற்பட்டவர்களிடம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, போலியான விமான பயணச்சீட்டு, விசா, வேலைக்கான உத்தரவு ஆகியவற்றை தயார் செய்து கொடுத்து ஏமாற்றி விட்டு, தலைமறைவாகியதாக கூறி னார்கள்.

கைது செய்யப்பட்ட ஜான் நியூ பினோத் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Friday, April 29, 2011

ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்: பிரதீபா பட்டீல் அறிவிப்பு

Be the first to comment!
Labels:
இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் ஜனாதிபதியாக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்று பிரதீபா பட்டீலிடம் இன்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ``நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. எனது சொந்த மாநிலமான மராட்டியத்தில் உள்ள புனே நகரில் தங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

Official Press Release : Ajith Dissolves His Fan Clubs

1 Comment so far
Labels:

 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz